ஜே.இ.இ தேர்வில் சாதனை
குமாரபாளையம், பிப். 15
குமாரபாளையம் ராயல் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ,
ஜே.இ.இ தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.
குமாரபாளையம் ராயல் இன்டர்நேஷனல் பள்ளியில் பிளஸ்-2 பயிலும் மாணவர்கள் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜே.இ.இ.முதன்மை தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் மாணவர்கள் ஹரேஷ் 99.54 சதவீதமும், பாலவிஷ்ணு 97.57 சதவீதமும், கொம்பன் அர்ஜுன் 96.24 சதவீதமும், கவின் 95.27 சதவீதமும், தேவபிரசாந்த் 91.93 சதவீதமும் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இந்த மாணவர்கள் என்.ஐ.டி கல்லூரியில் சேருவதற்கும் மற்றும் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளார்கள்.
சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் அன்பழகன்,
செயலாளர் முருகேசன், பொருளாளர் கவிதா ஆனந்த், முதல்வர்.
ராஜஸ்ரீ, அகாடமிக் டைரக்டர் விஜய் கார்த்திக் மற்றும் ஆசிரியர்கள்
உள்பட பலர் பாராட்டினார்கள்.
0 கருத்துகள்